Parish Priest’s Message – First Friday – 7 (Tamil)

முதல் வெள்ளிக்கிழமை – 7

இயேசுவின் திருஇருதயத்தின் ஏழாவது கொடை

ஏழாவது கொடை: அவருடைய பணி

இயேசுவின் திருஇருதயத்திலிருந்து வழிந்தோடுகிறது
மானுடத்தின் மீட்புக்கான அவருடைய பணி –
இந்த அழைப்பு நம்மை அனுப்புகிறது.
இந்த நெருப்பை நாம் அணைக்க இயலாது.

‘தந்தை என்னை அனுப்பியதுபோல
நான் உங்களை அனுப்புகிறேன்’ (யோவா 20:21).
அவருடைய சொற்கள் ஒருசிலருக்கு மட்டுமல்ல,
மாறாக அவரை அன்பு செய்து அவரைப் பின்பற்றும் அனைவருக்குமானவை!

அவர் தம் விருப்பத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
அவர் வழியாகவே நாம் தந்தையின் அன்பை அறிகிறோம் (யோவா 17:26).
அவருடைய திறந்த இதயம் நமக்கு வழி திறக்கிறது
அதன் வழியாகவே நாம் அன்புக்குள் நுழைகிறோம்.

நம் கைகள் வழியாக அவர் அனைவருக்கும் நலம் தருகிறார்.
நம் குரல் வழியாக அவர் அமைதியை உரைக்கிறார்.
நம் காலடிகள் வழியாகவே வறியோருடன் அவர் நடக்கிறார்.
நம் வழியாகவே அவர் தம்மைக் கையளிக்கிறார் (உரோ 10:15).

அவருடைய பணி நம் பணி அல்ல –
இறைவேண்டலில் தொடங்குகிறது
இரக்கத்தில் வளர்கிறது
சான்று பகர்தலில் கனிகிறது (2 கொரி 5:20).

நாம் தொடர்ந்து நடப்போம், அச்சமின்றி!
அவருடைய ஆவியாரின் ஆற்றலோடு! (திப 1:8)
அவருடைய இதயம் நம் இதயமாகட்டும்,
உலகின் கடையெல்லை வரைக்கும்!

அருள்திரு தேவதாஸ் பங்கராஜ்
பங்குத்தந்தை

Leave a comment